ஜெருசலேமில் திடீர் துப்பாக்கிச் சூடு: உரிமை கோரியது ஹமாஸ் தரப்பு
ஜெருசலேம் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு ஹமாஸ் தரப்பினர் உரிமை கோரியுள்ளனர்.
ஜெருசலேம் நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்த நீடிப்பு
இந்தநிலையில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஹமாஸ் தரப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். அதேநேரம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் பொது மக்கள் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட இருவரும் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் எண்டனி பிளிங்கன் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவிவிக்கப்படுகிறது.
துவாரகா விடயத்தில் புலம் பெயர் மூன்று அமைப்புகளும் மௌனம்! குழப்பத்தில் மக்கள்: பகிரங்க குற்றச்சாட்டு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam