ஜா-எல பகுதியில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் தீவிர விசாரணை
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பட்டுவத்த சாமர என்பவரின் மனைவிக்குச் சொந்தமான வீட்டுக்கு அடையாளம் நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஜா - எல, புனித அன்னாள் வீதியில் அமைந்துள்ள இந்த வீட்டுக்கு இன்று(07.03.2026) அதிகாலை 1.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
இந்த தாக்குதலுக்கு ரி - 56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வீடு தற்போது வேறொரு தரப்பினருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஜா - எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam