பாடசாலை மாணவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையின் பாடசாலை மாணவர்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகள் வளரிளம் பருவத்தை அடையும்போது உடல் பருமன் அடையும் அபாயத்தில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது மருத்துவர் அனில் ஜாசிங்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு
இந்தக் கணக்கெடுப்பின்படி, 5 வயதுக்குட்பட்ட மற்றும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை எடுத்துக்கொண்டால், நமது ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை விகிதம் 10.1வீதமாக உள்ளது.

மெலிவு 8.1வீதமாகவும், எடை குறைவு 16.1வீதமாகவும் உள்ளது. அதிக எடை 0.5வீதம் என்ற மிகக் குறைந்த அளவில் உள்ளது.
இது நமது குழந்தைகளில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
இத்தகைய ஒரு நாட்டில், குழந்தைகள் வளர வளர, இளமை மற்றும் நடுத்தர வயதை அடையும்போது உடல் பருமன் அடைகின்றனர். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.
பெரியவர்களிடையே உடல் பருமன், பெண்களில் 47வீதமாகவும் ஆண்களில் 30வீதமாகவும் இருந்த நிலையில், அது பெண்களில் 15வீதமாகவும் ஆண்களில் 6வீதமாகவும் குறைந்துள்ளது என்றும் மருத்துவர் அனில் ஜாசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan