மனைவி கொடுத்த தகவலால் வருத்தமடைந்த மகிந்த! உடனடியாக தொலைபேசியில் கவலை தெரிவித்த பிரதமர்
சுசில் பிரேமஜயந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்சவே அறிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், பதவியில் இருந்து நீக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுசில் பிரேமஜயந்தவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தெரிவித்ததாக குறிப்பிடப்படுகின்றது.
சுசில் பிரேமஜயந்த அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் அவருக்கு தொடர்பு கொண்டு வருத்தம் வெளியிட்டு வருகின்றனர்.
You My Like This Video