இலங்கையில் இன்று முதல் புதிய எரிபொருள் விற்பனை
இலங்கையின் எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விற்பனை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Shell-RM Parks Inc நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் நேற்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அதன்படி, இன்று (22) முதல் Shell-RM Parks Inc நிறுவனம் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளது.
எரிசக்தி துறையில் மீண்டும் இணைந்துள்ள ஷெல் நிறுவனம்
இதேவேளை, 63 வருடங்களின் பின்னர், ஷெல் நிறுவனம் இலங்கையின் எரிசக்தி துறையில் மீண்டும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |