அடுத்த 24 மணிநேரத்திற்குள் அமெரிக்கா - ஈரான் இறுதி ஒப்பந்தம்! வெளியான அதிரடி தகவல்
மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் அமெரிக்காவும் ஈரானும் இணக்கம் கண்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒப்பந்தத்தின் இறுதி வரைவு தயாராகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த 24 மணிநேரத்திற்குள்..
இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நடவடிக்கைக்காக பாகிஸ்தான் தற்போது தயாராகி வருவதாகவும், அடுத்த 24 மணிநேரத்திற்குள் மின்னணு முறையில் (Electronic Signing) ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலம் உள்ளிட்ட ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப விவரங்களை இறுதி செய்யும் நோக்கில் அடுத்த வாரம் தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்டால், பெப்ரவரி மாதத்தில் மோதல் வெடித்த பின்னர் கிடைக்கும் மிகப்பெரிய இராஜதந்திர முன்னேற்றமாக இது அமையும்.
We are closer to a peace deal than ever before. With finalisation likely expected in the next 24 hours, Pakistan is preparing for the electronic signing of the peace deal immediately after, followed by technical level talks next week.
— Shehbaz Sharif (@CMShehbaz) June 13, 2026
We would like to thank United States of…
அதேவேளை, உலக எரிசக்தி விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கும், பரவலான பிராந்தியப் போர் குறித்த அச்சங்களை குறைப்பதற்கும் இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த ஈஸ்டர் தாக்குதல்: சுரேஷ் சலேயைக் காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்
இன்று, பேசிய ஷெரீப், ஆரம்பகட்ட ஒப்பந்தத்திற்கான இறுதி உரையில் வாஷிங்டனும் தெஹ்ரானும் உடன்பாடு எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“அடுத்த 24 மணிநேரத்திற்குள் மின்னணு கையொப்பம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் கூறியதுடன், இரு தரப்புகளுக்கும் இடையிலான உரையாடலை எளிதாக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்கு முன்பும் பலமுறை உடனடி முன்னேற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவை நடைமுறைக்கு வராத நிலையில், இம்முறையும் எச்சரிக்கையுடன் அணுகப்படுகின்றது.
மேலும், ஷெரீப்பின் காலக்கெடு குறித்த கருத்தை அமெரிக்க வெள்ளை மாளிகையோ அல்லது ஈரான் தலைமையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
பாலச்சந்திரனை என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் பாதுகாத்திருப்பேன்! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் உருக்கம்
ஹோர்முஸ் நீரிணை
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், உருவாகி வரும் ஒப்பந்தம் முதலில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் அடுத்த 60 நாட்களில் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், குறிப்பாக அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அகற்றுதல் அல்லது அழித்தல் தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் அணுசக்தி தொடர்பான விவகாரங்கள் பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தை கட்டத்தில் தீர்மானிக்கப்படும் என தெரிவித்ததுடன், தேவைப்பட்டால் பேச்சுவார்த்தைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.