உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன் : தமிழக முதல்வருக்கு சென்ற கடிதம்
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று பல வருடங்களின் பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக் கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி தற்போது திருச்சி சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தமிழக முதல்வருக்கு சிறைக்கைதிகள் உரிமை மையம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
சாந்தனுக்கு சிகிச்சை வழங்க வேண்டும்
குறித்த கடிதத்தில்,
சாந்தனிற்கு கல்லீரல் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார்.
தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும்
திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கல் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் இரண்டு மாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால் அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
