வெளிநாடு ஒன்றில் ஷானி அபேசேகரவின் இரகசிய நடவடிக்கை

CID - Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Indonesia
By Dharu Aug 28, 2025 12:06 PM GMT
Report

கடுமையான அரசியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில், குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஷானி அபேசேகரவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட இரகசிய நடவடிக்கை வெற்றியளித்துள்ளததாக பாதுகாப்புதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பல முக்கிய பாதாள உலக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டதன் மூலம் குறித்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தோனேசிய பொலிஸாருடன் ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டு நடவடிக்கையின் விளைவாக, கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா, பாணந்துறை நிலங்கா, பாக்கோ சமன்(மித்தெனிய மூவர் படுகொலை குற்றவாளி)  மற்றும் தம்பரி லஹிரு உள்ளிட்ட ஆறு நபர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் வெளிநாட்டில் கைது

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் வெளிநாட்டில் கைது

பல சர்ச்சைக்குரிய குற்றங்கள்

கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து நாட்டில் பல சர்ச்சைக்குரிய குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு நீதவான நீதிமன்ற வளாகத்தில் 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கெஹல்பத்தர பத்மே மற்றும் முன்னாள் இராணுவ வீரர் கமாண்டோ சாலிந்தா ஆகியோர் முக்கிய சந்தேக நபர்களாக உள்ளனர்.

வெளிநாடு ஒன்றில் ஷானி அபேசேகரவின் இரகசிய நடவடிக்கை | Shani Abeysekara Waits 7 Days Indonesi Arrest

மேலும், பாணந்துறை பகுதியில் பல பாதாள உலக மோதல்களில் தொடர்புடைய பாணந்துறை நிலங்கா மற்றும் மித்தேனியாவில் இளம் குழந்தைகள் முன்னிலையில் கஜ்ஜா என்பவரை கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாக்கோ சமன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

ஜூலை மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் பரவியிருந்தாலும், பின்னர் அவர்கள் இந்தோனேசியாவுக்கு தப்பிச் சென்றதாக தெரியவந்தது.

அதன்படி, இந்த நடவடிக்கையில் எந்தவித ஆயுத மோதல்களும் இல்லாமல் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு இந்திய புலனாய்வுப் பிரிவுகளும் ஆதரவளித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கட்டுப்படுத்த அநுர தரப்பு எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கட்டுப்படுத்த அநுர தரப்பு எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள்

இன்று நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் வளர்ந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் அந்த உறவுகளை முறித்துக் கொண்டதாகவும் கூறினார்.

பாதாள உலகத்துடனும் அவர்களின் சொத்துக்களுடனும் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் குறித்தும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் ஷானி அபேசேகரவின் இரகசிய நடவடிக்கை | Shani Abeysekara Waits 7 Days Indonesi Arrest

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சட்டப்பூர்வமாக நாட்டிற்கு கொண்டு வர இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பின்னணியில் தற்போதைய கைது நடவடிக்கை இலங்கை பாதுகாப்பு துறையின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அறியப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூடுகளில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் சமீப காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நாளுக்கு நாள் நிகழும் துப்பாக்கிச் சூடுகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

சமீபத்திய துப்பாக்கிச் சூடுகளில், சந்தேகிக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உட்பட பல உயர்மட்ட நபர்கள் குறிவைக்கப்பட்டனர்.

இலங்கை வரலாற்றில் இன்டர்போலின் உதவியுடன் வெளிநாட்டில் இடம்பெற்ற அதிரடிக் கைது!

இலங்கை வரலாற்றில் இன்டர்போலின் உதவியுடன் வெளிநாட்டில் இடம்பெற்ற அதிரடிக் கைது!

டான் பிரியசாத்

சர்ச்சைக்குரிய நபரான டான் பிரியசாத் ஏப்ரல் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார் .

மேலும் 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் நாட்டில் மற்றும் மார்ச் 31, 2025 க்கு இடையில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 238 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடு ஒன்றில் ஷானி அபேசேகரவின் இரகசிய நடவடிக்கை | Shani Abeysekara Waits 7 Days Indonesi Arrest

மேலும் இந்த ஆண்டில் மாத்திரம், 87 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதன் விளைவாக 47 இறப்புகள் மற்றும் 50 காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளில் மற்றும் இந்த ஆண்டு இதுவரை நடந்த கொலை அலையின் இடங்களைக் காட்டுவது தொடர்பில் வரைபடத்தை ஆராயும்போது வெளிப்படும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மேற்கு மாகாணத்திலும் தெற்கு மாகாணத்திலும் தொடர்ந்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட வாரியாக, கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களில் அதிக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அம்பலாங்கொடை காவல் பிரிவு மற்றும் அஹுங்கல்ல காவல் பிரிவுகளில் கணிசமான எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

சமீபத்திய ஆண்டுகளின் தரவுகளை ஆராயும்போது, ​​துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை 81 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும், தற்போதுவரை 87ஆக காணப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகிறது, இது நாட்டில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு முக்கிய காரணம் போட்டியாளர்களான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

நானுஓயாவில் கொடூரமாக தாக்கப்பட்ட நாய்! பதைபதைக்க வைக்கும் காணொளி..

நானுஓயாவில் கொடூரமாக தாக்கப்பட்ட நாய்! பதைபதைக்க வைக்கும் காணொளி..

பழைய பகைமை

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களுக்கு இடையேயான பழைய பகைமைகளின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாடு ஒன்றில் ஷானி அபேசேகரவின் இரகசிய நடவடிக்கை | Shani Abeysekara Waits 7 Days Indonesi Arrest

குடும்ப தகராறுகள், மனக்கசப்பு மற்றும் திருமணத்திற்கு புறம்பான விவகாரங்கள் காரணமாகவும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தரப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை நாட்டை விட்டு வெளியேறி துபாய் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்களால் நடத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான சர்வதேச சிவப்பு பிடியானைகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புகள் தெரிவிக்கின்றன.

துபாய் போன்ற நாடுகளை தளமாகக் கொண்ட பிற குற்றவாளிகள் இந்த நாட்டில் கொலைகளைச் செய்து வருவதாக கூறப்படுகிறது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US