ஆதிவாசிகளுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்ட தமிழரசுக் கட்சி (video)
மட்டக்களப்பு- மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பாக சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் குடும்பிமலை, இரணைக்குளம், மருதங்கேணிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர்.
எதிர்க்கொண்டுவரும் பிரச்சினைகள்
குறித்த பிரதேசத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளடங்கிய குழுவினர் விஜயம் செய்வதையறிந்த ஆதிவாசிகள் சமூகத்தினர் அவர்களுக்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செய்திருந்ததுடன், தங்களது சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமது கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.
இதன்போது மருதங்கேணிக்குளம் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரின் தலைவரைச் சந்தித்து அவர்களின் குறைகள் தொடர்பாக வினவியுள்ளார். குறிப்பாக குறித்த பிரதேசத்தில் ஆதிவாசிகள் சமூகத்தினர் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
ஊழல் மோசடி
மேலும், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் ஆதிவாசிகள் சமூகத்தினர் எடுத்துக்கூறியிருந்தனர்.
அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது இடத்திற்கு முதற் தடவையாக வந்து தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டமைக்காக ஆதிவாசி சமூகத்தினர் சாணக்கியனிற்கு உள்ளிட்ட குழுவினருக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.











உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும் 37 நிமிடங்கள் முன்

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
