கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட பலர் கைது(Photo)
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசுவமடு தொட்டியடி 6 ஆம் படைப்பிரிவின் இலங்கை சிங்க பிரிவின் இராணுவ முகாமுக்குக் கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களின் 5 உழவு இயந்திரத்துடன், 12 பேர் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்திற்கு எந்தவித அனுமதி பாத்திரங்களும் அற்ற நிலையிலும் மணல் அகழ்வுக்கு அனுமதிகள் வழங்கப்படாத இடத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை இவ்வாறு 5 உழவு இயந்திரத்துடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri