பிறந்து ஏழு வாரங்களேயான சிசு கோவிட் தொற்றினால் உயிரிழப்பு
பிறந்து ஏழு வாரங்களேயான சிசுவொன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் ஜி.விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
நுரையீரலில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த குழந்தைக்கு கோவிட் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்ததுடன், பின்னர் பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
இதேவேளை, குறித்த குழந்தையின் தாய்க்கும் கோவிட் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 23 மணி நேரம் முன்
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri