சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை விற்பனை செய்த ஏழு பேர் கைது
பயணத்தடை அமுலில் உள்ள வேளையில் சட்டவிரோதமாக மதுபானத்தை வைத்திருந்த மற்றும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட,மதுபானத்தை விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஏழு பேர் சாவகச்சேரியில் மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
N.சோதிதாதன் உதவி மதுவரி ஆணையாளர், மதுவரி அத்தயட்சகர் T.தங்கராஜா அறிவுறுத்தலில் பொறுப்பதிகாரி அசோகரத்தினம் தலைமையில், மதுவரி பரிசோதகர் வே.றசிகரன் தலைமையிலான குழுவினர் கொடிகாமம் சாவகச்சேரியில் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 750 மி.லீ 30போத்தல்கள், 180 மி.லீ 25 போத்தல்கள், 500 ml பியர் 100 ரின்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் போது ஏழு சந்தேகநபர்களையும் மதுவரித் திணைக்களத்தினர் கைது
செய்துள்ளதுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சாவகச்சேரி மது வரி
திணைக்களத்தினரால் சட்ட நவடிக்கை உட்படுபடுத்தப்படவுள்ளனர்.