இலங்கை நிதி நெருக்கடியால் ஜேர்மனியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை
ஜேர்மன் உட்பட மூன்று நாடுகளுக்கான தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானமானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியன தற்காலிகமாக மூடப்படவுள்ளன. இதற்கான அனுமதியை அமைரவை வழங்கியுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் பதவிகளின் வலையமைப்பின் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் நிலவும் பாரிய பொருளாதார சவால்களின் பின்னணியில், இருதரப்பு உறவுகளை திறம்பட நடத்துவதை உறுதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan