கர்ப்பிணி தாய்மாருக்கு ஆபத்து - விசேட மருத்துவர் சனத் லேனரோல்
இலங்கை முழுவதும் கோவிட் பரவி வருதன் காரணமாக நாட்டில் உள்ள கர்ப்பிணி தாய்மாருக்கு பாரதூரமான ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக மகப்பேற்று விசேட மருத்துவர் சனத் லேனரோல் தெரிவித்துள்ளார்.
சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
காணப்படும் நிலைமையின் அடிப்படையில் ஒரு மாதத்தில் சுமார் 20 கர்ப்பணி தாய்மார் உயிரிழக்கும் ஆபத்து இருக்கின்றது.
அத்துடன் சுமார் மூன்று லட்சத்து 40 ஆயிரம் தாய்மாருக்கு ஆபத்து அதிகம். கர்ப்பிணி தாய்மாருக்கு இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லை.
அவர்களுக்கு ஃபைசர் மற்றும் மோடானா தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை பெற்று தருமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அந்த தடுப்பூசிகள் கிடைக்கவில்லை.
இந்த நிலைமையால், பிறக்க போகும் தலைமுறையினரின் வழி ஆபத்தில் இருப்பதாகவும் சனத் லேனரோல் குறிப்பிட்டுள்ளார்.