மட்டக்களப்பு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை பார்வையிட்ட செந்தில் தொண்டமான்
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மற்றும் வர்த்தக வாணிப இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள சித்தாண்டி விநாயகர் கிராம அலைமகள் வித்தியாலயம் மற்றும் வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம் ஆகிய இடைத்தங்கல் முகாம்களுக்கே இருவரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதோடு இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்
மேலும், இடைத்தங்கல் முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை உடன் தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், ஆளுனர் மற்றும் இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தின் போது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், ஏறாவூர்பற்று பிரதேச சபை செயளாலர் வ.பற்குணன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர், அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam