குறுகிய காலத்தில் பாரிய சேவை: கிழக்கு ஆளுநருக்கு கிடைத்த பாராட்டு
ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர் தினேஷ் குணவர்தன, செந்தில் தொண்டமான் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளாார்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களின், உணவு பாதுகாப்பு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பில் நேற்று (05.08.2023) ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டம்
இதன் போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக 700 ஆசிரியர் நியமனம்,5000 இளைஞர்களுக்கு தொழில்நுட்ப வேலைவாய்ப்பு, இந்திய அரசிடமிருந்து 2371 மில்லியன் கடனற்ற நிதியுதவி, ஜப்பான் அரசுடன் இணைந்து அருகம்பே திட்டம ஆரம்பித்தல், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்தல், கிழக்கு மாகாணத்திற்கு முதல் முறையாக கோர்டிலா குரூஸ் கப்பலை வரவழைத்தமை போன்ற செயற்பாடுகளை நினைவுப்படுத்தினார்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி உரிமை பெற்றுக்கொடுத்தமை, பீச்
கிளீனிங் வேலைத்திட்டத்தின் ஊடாக ஐம்பதாயிரம் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்,ஒரு
இலட்சம் பிளாஸ்டிக் அல்லாத கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு கடற்கரைகள் சுத்தம்
செய்யப்பட்டமை, சட்ட ஒழுங்கை சீராக செயற்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
மேலும் ஆளுநர் மத சார்பற்ற வகையிலும் நியாயமான முடிவுகளை அனைவருக்கும் உதவும் வகையிலும் செயற்படுகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கருத்து
மேலும் மட்டக்களப்பு மாவட்ட மீளாய்வு கூட்டத்தில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நியாமான விடயங்கள் புறக்கணிக்கப்பட்டன.
மக்கள் பிரதிநிதியாக குரல் எழுப்பியும் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படவில்லை, ஆனால் ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்ற பிறகு, ஓரளவேனும் நியாயமான முறையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தக்கூடியதாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
