சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பதவியில் மாற்றம்.!
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் இது குறித்து பிரஸ்தாபித்துள்ளார்.
இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற மட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் ஓய்வு
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இம்மாதம் 23ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் அதற்கடுத்த பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களில் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பாக இருக்கும் லலித் பதிநாயக்க, சேவை அடிப்படையில் மூப்பு நிலையில் இருக்கும் நிலையில் அவருக்குப் பதிலாக தேசபந்து தென்னகோன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam
