போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்! ஹமாஸ் அழைப்பு
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இஸ்ரேலிய இராணுவத்தை முழுமையாக வெளியேற்றுவதற்கும் தயாராக உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் பற்றி விவாதிக்க தயாராக உள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த ஹமாஸ் அதிகாரி சமி அபு சுஹ்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய திட்டங்களை விவாதிக்க மத்தியஸ்தர்களின் கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இதன்படி போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றியும் மத்தியஸ்தர்களிடம் விவாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 53 பேரும், லெபனானில் 21 பேரும் கொல்லப்பட்ட நிலையில் எகிப்து ஜனாதிபதியால் சமாதான பேச்சவார்த்தைக்கான இந்த அறைகூவல் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விடுக்கப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸும் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
வடக்கு காசா
வடக்கு காசாவில் நாளுக்கு நாள் மரணங்களும், காயங்களும், அழிவுகளும் அதிகரித்து வருவதாக அவர் வருத்தம் தெரிவித்த சூழலில் தான் 2 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் எகிப்து அதிபர்.

மேலும், இஸ்ரேல் தனது தாக்குதலை காசாவில் தொடங்கி, லெபனான், ஈரான் என விஸ்தரித்துக் கொண்டே செல்வது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam