பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான விசாரணைகள் ஆரம்பம்
பிரித்தானியாவுக்கான (UK) இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijith Herath) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று (29) குறிப்பிட்டுள்ளார்.
நிதி செலவீடு
உயர்ஸ்தானிகர் பயன்படுத்திய கார் தொடர்பான அறிக்கைகளை அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

எனினும், உயர்ஸ்தானிகரின் நிதியிலேயே இந்த கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்காக இலங்கை அரசின் எந்த நிதியும் செலவிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தநிலையில், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை இராஜதந்திரிகள் எவரும் உடனடியாக மீள அழைக்கப்படமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அரசியல் விசுவாசத்தின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் உரிய காலத்தில் மீள அழைக்கப்படுவார்கள் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam