செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு
செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(10.08.2026) முன்னெடுப்பட்டுள்ளன.
இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
48ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்படும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்