இலங்கையில் தமிழர்கள் அகிம்சை வழியில் வாழ முடியாத நிலை: அருட்தந்தை மா.சத்திவேல் விசனம்

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan political crisis Selvarajah Kajendren
By Shan Sep 19, 2023 02:10 AM GMT
Report

இலங்கையில் தமிழர்கள் அகிம்சை வழியிலும் வாழ முடியாது என்பதை சர்வதேசமும் மனித பேரவையும் உணர்ந்திருக்கும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (19.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத வன்முறை அரசியல்

தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய மக்கள் அஞ்சலி ஊர்தியையும் அதில் பயணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி நடராஜா காண்டீபன் உட்பட ஊர்தியோடு பயணித்தவர்கள் தேசிய கொடி தாங்கியவர்களால் மிருகத்தனமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத வன்முறை அரசியலை இனவாதிகள் தொடர்ந்தும் செய்ய விரும்புகின்றார்கள் என்பதையே தாக்குதல் வெளிப்படுத்துவதோடு இந்நாட்டில் தமிழர்கள் அகிம்சை வழியிலும் வாழ முடியாது என்பதை சர்வதேசமும் மனித பேரவையும் உணர்ந்திருக்கும் என நம்புகின்றோம்.

தொடர்ந்து மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரையும் இத் தாக்குதல் சம்பவம் அவமானப்படுத்தியுள்ளது.

தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என ஐவரை கைது செய்துள்ளமை நடைபெறும் மனித உரிமை கூட்டத்திற்கு தாக்குதல் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது என காட்டும் கண்துடைப்பு நாடகமாகும்.

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு


சமூக வலைத்தளங்களே சாட்சி

தாக்குதல் தொடர்பில் காட்சிகளின் பதிவு சமூக வலைத்தளங்களில் போதுமான சாட்சியாக இருக்கும் போது ஐவர் மட்டும் கைது செய்யப்பட்டது ஏன்? திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தி பயணத்தை ஆரம்பத்திலிருந்து அரச புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக முன்னும் பின்னும் பயணித்ததை நாம் அறிவோம். எல்லா பொலிஸ் நிலையங்களுக்கும் இது தெரியும்.

அவ்வாறு இருக்கையில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என பொலிஸார் அறிந்திருந்தும் அதை தடுக்க முன் ஏற்பாடு செய்யாதது ஏன்? ஊர்தி வழிப்பயணம் தொடர்பாக புலனாய்வு பொலிஸார் யார் யாருக்கெல்லாம் தகவல் கொடுத்தார்கள்? என்பதனை அவர்களின் தொலைபேசியை ஆராய்வதன் மூலம் கண்டறியலாம்.

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்! அமெரிக்காவின் முக்கியஸ்தர் சமந்தா பவர்

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்! அமெரிக்காவின் முக்கியஸ்தர் சமந்தா பவர்

தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தமக்கே உரிய பாணியில் தடுக்க முயற்சிக்காதது ஏன் ? எனும் கேள்விகளுக்கு தாக்குதல் திட்டமிட்ட அரச பயங்கரவாதத்தின் கோரம் என்பதே உண்மை.

தமிழர்களுக்கு எதிராக இனவாத நோக்கில் வரலாற்றில் வன்முறையினை கட்டவிழ்த்து விட்டவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெறுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்வாறே நீதிமன்ற குற்றவாளிகளாக அடையாளம் கண்டாலும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வெளியில் வந்து விடுவார்கள். இது கடந்த கால எமது அனுபவம்.

இலங்கையில் தமிழர்கள் அகிம்சை வழியில் வாழ முடியாத நிலை: அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் | Selvaraja Kagendren Attack In Trincomale

மக்கள் அரசியல்

திலீபன் அஞ்சலி ஊர்த்தியின் மீதும் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி மற்றும் திலீபன் உணர்வாளர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர கொலை வெறி தாக்குதல் தமிழ் மக்களின் உள்ளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிங்கள உறவுகளும் அரசின் மீதும் அரசின் பாதுகாப்பு கட்டமைப்பின் மீதும் கோபம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் கோப உணர்வுகளை அறிக்கைகளில் மட்டும் காட்டாது தொடரும் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்திக்கு பாதுகாப்பு கொடுக்கவும் அது பயணிக்கும் வழிகளில் எல்லாம் மக்கள் அஞ்சலிகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கையில் தமிழர்கள் அகிம்சை வழியில் வாழ முடியாத நிலை: அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் | Selvaraja Kagendren Attack In Trincomale

இதனை ஒரு கட்சியின் செயல் என ஒதுக்கினால் மக்கள் அரசியல் செய்ய முடியாது போய்விடும் என்பதையும் கூற விரும்புகின்றோம்.

அது மட்டுமல்ல இறுதி நாள் நிகழ்வு எழுச்சியாகவும் அமைதியாகவும் நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கடந்த வருடத்தை போன்று போட்டி நிகழ்வாக அமைந்து விடுமாய் அது இறைவனுக்கும் எனது அரசியலுக்கும் அவமானமாக அமைந்துவிடும்.

கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதலுக்கு கனேடிய அமைச்சர் கடும் கண்டனம்

கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதலுக்கு கனேடிய அமைச்சர் கடும் கண்டனம்


இனவாதிகளுக்கு அது தீமையாகவும் அமைந்துவிடும் என அழைப்பினை தீவிர படுத்தியிருக்கும் இக்காலகட்டத்தில் தமிழ் தலைமைகள் கட்சி அரசியல் மற்றும் தேர்தல் அரசியலுக்கு வெளியில் வந்து தமிழர்களின் தேசியம் காக்க ஒன்றிணைய வேண்டும் என்ற தாக்குதல் சம்பவம் எமக்கு உணர்த்துகின்றது.

எனவே தமிழ் அரசியல் தலைவர்கள் யாருக்காகவும் அரசியல் செய்யாது தமிழர் தேசத்திற்காக மக்கள் அரசியல் செய்ய திலீபன்  நினைவேந்தல் வாரத்தில் உறுதி கொள்வோம். அதனை நாட்டின் பேரினவாத அரசுக்கும், சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்கள் பாரிய போராட்டம் (Photos)

ஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்கள் பாரிய போராட்டம் (Photos)

கஜேந்திரன் மீதான தாக்குதலுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

கஜேந்திரன் மீதான தாக்குதலுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US