செல்பி புகைப்படத்தால் இளைஞர்கள் இருவருக்கு நேர்ந்த விபரீதம்
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் தொலைபேசியில் செல்பி எடுப்பதற்கு முற்பட்டு மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (14) மாலை இடம் பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டிருந்த வேளையில் கையடக்க தொலைபேசியில் செல்பி எடுப்பதற்கு முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறுக்கே வந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் இதனை அடுத்து இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் வவுனியா- பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 மட்டும் 30 வயது உடையவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam