சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட பெருந்தொகையான வெளிநாட்டு நாணயம் பறிமுதல்
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முற்பட்ட பெருந்தொகையான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (11) அதிகாலை ஒருமணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
கட்டுநாயக்கவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கவிருந்த நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே அவ்வாறு சட்டவிரோதமாக பெருந்தொகையான வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
அபராதம் விதிப்பு
சுங்கத்துறையின் சோதனையின் போது அவரிடம் இருந்து 41 ஆயிரம் யூரோக்கள், 40 கனேடிய டொலர்கள், 15 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள், 15 ஆயிரம் சவூதி றியால் மற்றும் 40 லட்சம் ரூபா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்தப் பெறுமதி இலங்கை நாணய மதிப்பில் 2 கோடியே நாற்பது இலட்சமாகும்.
குறித்த பணத்தொகை சுங்கத்திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், அதனை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முற்பட்ட வர்த்தகருக்கு 31 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam