கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தொழிலதிபர்!
சட்டவிரோதமாக முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.
மேலதிக விசாரணை
துபாயில் இருந்து வந்த சந்தேக நபர், 15,000 சிகரெட்டுகள் அடங்கிய 75 சிகரெட் அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்திருந்தபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் தொகையின் மதிப்பு இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri