இம்முறை மாகாணசபை தேர்தலில் ஆட்சியை கைப்பிடிப்பது உறுதி : கனடாவில் சாணக்கியன்
கூட்டமைப்பு ஒற்றுமையாகத்தான் உள்ளது, இம்முறை மாகாணசபை தேர்தலில் ஆட்சியைக் கைப்பிடிப்பது உறுதி எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கனடாவின் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய சட்ட நிபுணத்துவ குழுதான் அமெரிக்காவுக்குப் போனது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குத் தெரியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்குள் எந்த விரிசலும் இல்லை. ஊடகங்கள் தான் இதனை பரவலாக பேசிக்கொண்டிருக்கிறதே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகத்தான் உள்ளது. இம்முறை மாகாணசபை தேர்தலில் ஆட்சியைக் கைப்பிடிப்பது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam