சீனாவின் வங்கியிடம் 500 மில்லியன் டொலர் கடனை கோரியுள்ள இலங்கை
இலங்கையின் பசுமை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீனாவின் பீஜிங் நகரில் அமைந்துள்ள சர்வதேச உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியிடம் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது.
இந்த வங்கி கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன் இலங்கை அதன் ஆரம்ப உறுப்பு நாடாக இருந்து வருகிறது.
எவ்வாறாயினும் இலங்கை கோரியுள்ள கடனை வழங்குவது குறித்து அந்த வங்கி இன்னும் உறுதியான பதிலை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவின் எக்சிம் வங்கி உட்பட நிதி நிறுவனங்களிடம் கடனை பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் சீன அரசிடமும் அரசாங்கம் கடனை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.