வவுனியா வைத்தியசாலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பாடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
வவுனியா வைத்தியசாலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் செயற்படுவது மக்கள் மத்தியில் கோவிட் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், வவுனியா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களிலும் சில தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் வைத்தியசாலை பணிப்பாளரினால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலைக்குள் நோயாளர்களை பார்ரைவயிடுவதற்கு செல்பவர்கள் தொகையை மட்டுப்படுத்த பாஸ் நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதும் அங்கு கடமையில் இருக்கும் பாதுகாப்பு உத்தியேதாகத்தர்கள் சுகாதார நடைமுறைகளை சீராக பின்பற்றாது, மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடத்தில் பொறுப்பற்ற தனமாக முகக்கவசத்தை சீராக அணியாது தொழிற்படுகின்றனர்.
அத்துடன் வைத்தியசாலைக்கு சென்று வரும் மக்களுடன் குற்றவாளிகளை நடத்துவது போல் கடும் போக்காகவும் செயற்படுகின்றனர்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு சென்று வரும் மக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செயற்பாடு குறித்து அச்சம் அடைந்துள்ளனர்.