இலங்கையின் முடிவால் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு
இலங்கையில் 11 இஸ்லாமிய குழுக்கள் மீது தடை அறிவிக்கப்பட்டமையை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் இந்திய மண்ணிலிருந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை வழிநடத்த படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கான எச்சரிக்கையை அடுத்து தமிழக காவல்துறையினர் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக த இந்து செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சமீபத்தில் ஒப்புதல் வழங்கினார்.
ஐக்கிய தௌஹித் ஜமாத், இலங்கை தௌஹித் ஜமாத், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்,
அனைத்து இலங்கை தௌஹித் ஜமாஅத், ஜாமியதுல் அன்சாரிஸ் சுன்னத்துல் மொஹமதியா,
தாருல் ஆதார், ஜாமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், இஸ்லாமிய அரசு,
ஈராக் இஸ்லாமிய அரசு முத்துக்களைக் காப்பாற்றுங்கள், மற்றும் சூப்பர் முஸ்லீம்
என்பனவும் தடைசெய்ய பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளில் அடங்கும்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri