முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பில் வெளியாகிய அறிக்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த செலவு சுமார் 110 கோடி ரூபாவாகும் என பொலிஸ் தலைமையக அறிக்கை தெரிவிக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60 ஆக மாற்றியமைத்து பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வருடாந்தம் 32 கோடி ரூபாவுக்கும் அதிகமான செலவு செய்யப்படுவதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையால் பாதுகாப்பில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri