பாதுகாப்பு கோரும் விஜய்.. பாதிக்கப்பட்டோரை நேரில் காண நடவடிக்கை
கரூரில் இடம்பெற்ற தவெக கட்சியின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை நேரில் காண செல்வதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் பாதுகாப்பு கோரியுள்ளார்.
மனு தாக்கல்
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் அளிப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு தவெக கோரியுள்ளது.
மேலும், விஜய் குறித்த இடங்களுக்கு சென்றால் மீண்டும் மக்கள் கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளது எனவும் அதன் காரணமாக இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதியும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி தருமாறு தவெக மனு தாக்கல் செய்யவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



