இராணுவத்தினரை பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் ரகசிய அகழ்வாய்வு: சபையில் பகிரங்கம்(Video)
புத்த சாசன அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் என்பன வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் எமது தேசத்தை திட்டமிட்டு சிங்கள பௌத்த மயமாக்குகின்ற அடிப்படையில் தான் முன்னெடுக்கபடுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொல்பொருளியல் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வாய்வுகள் யாவும் இராணுவத்தினரை பயன்படுத்தி ரகசியமாக மேற்கொள்ளபடுகின்றன.
இதேவேளை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அதிகாரிகளை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடுகின்றது.
முல்லைத்தீவு குருந்தூர் மலை, 1932 ஆம் ஆண்டு சுற்றறிக்கையில் அது ஒரு தொல்பொருள் இடம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளபோகிறோம் என கூறி அங்கு ரகசியமாக ஒரு விகாரை அமைக்கபட்டிருந்தது.” என கூறியுள்ளார்.
இது தொடர்பான செல்வராசா கஜேந்திரனின் முழுமையான உரையை இந்த காணொளியில் காணலாம்,
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 11 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam