இராணுவத்தினரை பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் ரகசிய அகழ்வாய்வு: சபையில் பகிரங்கம்(Video)
புத்த சாசன அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் என்பன வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் எமது தேசத்தை திட்டமிட்டு சிங்கள பௌத்த மயமாக்குகின்ற அடிப்படையில் தான் முன்னெடுக்கபடுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொல்பொருளியல் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வாய்வுகள் யாவும் இராணுவத்தினரை பயன்படுத்தி ரகசியமாக மேற்கொள்ளபடுகின்றன.
இதேவேளை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அதிகாரிகளை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடுகின்றது.
முல்லைத்தீவு குருந்தூர் மலை, 1932 ஆம் ஆண்டு சுற்றறிக்கையில் அது ஒரு தொல்பொருள் இடம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளபோகிறோம் என கூறி அங்கு ரகசியமாக ஒரு விகாரை அமைக்கபட்டிருந்தது.” என கூறியுள்ளார்.
இது தொடர்பான செல்வராசா கஜேந்திரனின் முழுமையான உரையை இந்த காணொளியில் காணலாம்,
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam