கிழக்கில் இன்று முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை
கிழக்கு மாகாணத்தில் இன்று முதல் கோவிட் - 19 இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும தெரிவிக்கையில்,
இதன் அடிப்படையில் இன்று திருகோணமலை மாவட்டத்தில் சில சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் கிழக்கு மாகாணத்தில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் இத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
முதலாவதாக சுகாதாரத் துறையினருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.