நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் வாக்கெடுப்பு நிறைவேற்றம்
உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் மீதான விவாதம் இன்று (24) இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன.

முதலாம் வாக்கெடுப்பு
இதன்படி, இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
இதேவேளை நேற்றையதினம் நடத்தப்பட்ட முதலாம் வாக்கெடுப்பில் 33 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய ஒருமைப்பாடு அலுவலக சட்டமூலம்
மேலும்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்திற்கு தாம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். எனவே இன்று முதல் இந்த யோசனை சட்டமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த சட்டமூலத்துக்கு இலங்கையின் சில அரசியல் தரப்புக்கள் தமது
எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam