பொகவந்தலாவ பகுதியில் கர்ப்பிணி தாய்மாருக்கான இரண்டாவது கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது
பொகவந்தலாவ பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோன்சி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவின் ஹோன்சி, என்பீலட், டிக்கோயா தெற்கு பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணி தாய்மாருக்கான இரண்டாவது சைனோபாம் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றுள்ளது.
டிக்கோயா நகர மண்டபத்தில் இந்த தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றதுடன், இங்கு 100 கர்ப்பிணி தாய்மாருக்கான தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அழைக்கப்பட்டிருந்த அனைத்து தாய்மாரும் வருகை தந்து தமது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதாக ஹோன்சி பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர் மல்தெனிய தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தமது தடுப்பூசிகளைக் கர்ப்பிணி தாய்மார் பெற்றுக் கொண்டுள்ளார்.
கொட்டும் மழையிலும் போக்குவரத்து கட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் அனைத்து கர்ப்பிணி தாய்மாரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








