மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று

Sri Lankan Tamils Kilinochchi Northern Province of Sri Lanka
By Independent Writer Nov 22, 2025 10:21 AM GMT
Report

2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நிகழ்வுகளில் இரண்டாம் நாள் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சுண்டிகுளம் சந்திப் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனைகள் நடைபெற்றுள்ளது.

அப்போது, சுண்டிகுளம் சந்தியிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபம் வரை மாவீரரை பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீதி ஊடாக மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

அங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் மலர் வணக்கம் நிகழ்வும் நடைபெற்றதுடன் மாவீரரின் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

செய்தி - தேவந்தன்

புதுக்குடியிருப்பு

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இந்த ஆண்டும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

அந்தவகையில், புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம் என்றுமில்லாதவாறு கோம்பாவில் புலம்பெயர் தேசத்து உறவுகளும் , கோம்பாவில் மக்கள், இளைஞர்கள் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் ஏற்பாடாகியுள்ளது.  

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

செய்தி - ஷன்

திருகோணமலை 

மாவீரர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தின் மாவீரர்கள் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இன்று (22.11.2025) இடம்பெற்றுள்ளது.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த மாவீரர் தின நிகழ்வில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காக உணர்வுபூர்வமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அக வணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

செய்தி - ரொஷான்

சம்பூர்

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

இதன்போது, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

செய்தி - கியாஸ் ஷாபி

வடமராட்சி 

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் அனுஷ்டிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events  

இந்த அனுஷ்டிப்பு இன்றையதினம் (22.11.2023) உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல நினைவுத்தூபியில் நடாத்தப்பட்டுள்ளது.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

செய்தி - எரிமலை

சனசமூக நிலையம்

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.நீக்கிளஸ் சனசமூக நிலையத்தில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

இதன்போது மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை சூடி அஞ்சலி செய்யப்பட்டது. 

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

செய்தி - தீபன்

முல்லைத்தீவில் மண்டபம் 

மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் ஒன்று இன்று (22) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் விபரங்கள் அடங்கிய படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் இன்று மக்கள் அஞ்சலிக்காக திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த மாவீரர் மண்டபம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

செய்தி - கீதன்

முள்ளிவாய்க்கால் மேற்கு

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

இதன்போது, முள்ளிவாய்க்கால் மேற்கு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் முள்ளிவாய்க்கால் மேற்கு பாடசாலை முன்பாக இருந்து மங்கள வாத்திய இசையுடன் மாலை அணிவிக்கப்பட்டு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.  

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

செய்தி - கீதன்

முள்ளியவளை 

முள்ளியவளை வடக்கு பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் இளைஞர்களின் ஒத்துளைப்புடன் ஒரு கிராமத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு பொதுநோக்கு மண்டபத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மாவீரர்களின் பெற்றோர்கள் செங்கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாவீரர் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events 

செய்தி - கீதன்

கொக்கிளாய் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிராமத்தில் உள்ள மாவீரர்கள் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு, இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.

செம்மலைப்பகுதியில் முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில் இருந்து மங்கள வாத்தியத்துடன் மாவீரர்கள் பெற்றோர்கள் கையில் சுடர் ஏந்தியவாறு அழைத்து வரப்பட்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பந்தலில் மாவீரர் வணக்க நிகழ்வும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் நடைபெற்றுள்ளது.  

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

செய்தி - கீதன்

அராலி

மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (22.11.2025) மாலை 3 மணியளவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மக்களின் ஆதரவுடன் யாழ். அராலியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மாவீரர்களது பெற்றோர்கள் அழைத்து வரப்பட்டு மாவீரர் கப்டனின் தாயாரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events

மாவீரர் நிகழ்வுகளின் இரண்டாம் நாள் இன்று | Second Day Of The Maveerar Events 

செய்தி - ஷன்

அநுரவை மிரட்டிய நாமல்.. அடுத்து நடக்க போவது என்ன..!

அநுரவை மிரட்டிய நாமல்.. அடுத்து நடக்க போவது என்ன..!

பேரணிக்கு பின்னர் சபையில் சீறிய நாமல்..!

பேரணிக்கு பின்னர் சபையில் சீறிய நாமல்..!

வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு: போலி விளம்பரம் குறித்து எச்சரிக்கை

வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு: போலி விளம்பரம் குறித்து எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US