14 பேர் உயிரிழந்தனர்! பருவக்கால நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை!
14 பேர் பலி
பருவக் காய்ச்சல் காரணமாக இலங்கையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் பருவகால காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 100க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொழும்பு, இரத்தினபுரி, கஹதுடுவ
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கஹதுடுவ மற்றும் கலவான பகுதிகளில் இருந்தும் சில கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மாதிரிகள் வந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகர எல்லைகள், தெஹிவளை, பிலியந்தலை மற்றும் ஹோமாகம ஆகிய இடங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக மாறியுள்ளன.
அத்துடன், பேருவளை மற்றும் களுத்துறை ஆகியவை அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
வருடந்தோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலும் பரவும் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸால் பருவகால காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவர் ஜூட் ஜெயமஹா தெரிவித்துள்ளார்.
குணங்குறிகள்
அதிக காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் / அடைப்பு, தொண்டை புண், தலைவலி, தசை வலி, சொறி மற்றும் சோர்வு ஆகியவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
சுவாசிப்பதில் சிரமம், ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் போன்ற அடிப்படை சுவாச பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு இது அதிகரித்து நிமோனியாவாக மாறலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.