ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் - வெளியான வரைபடத்தினால் பெரும் அதிர்ச்சியில் உலக நாடுகள்
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே சர்வதேச சட்டத்தின்படி ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சென்று வர ஈரான் அனுமதிக்கும் என ஈரான் துணை வெளியுறவு மந்திரி சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார்.
அதேநேரம் போரின்போது ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணி வெடிகள் பொருத்தப்பட்டதால், அந்த வழியாக கப்பல் போக்குவரத்து நடத்துவது அபாயகரமானது என ஈரான் இராணுவம் அறிவித்திருந்தது.
புதிய வழித்தடத்தில் கப்பல்கள் பயணிக்க அறிவுறுத்தல்
இதன்போது கண்ணிவெடி பொருத்தப்பட்டிருக்கும் இடங்களை குறிக்கும் வரைபடத்தையும் இராணுவம் வெளியிட்டிருந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து புதிய வழித்தடத்தில் கப்பல்கள் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, உள்ளே வரும் கப்பல்கள் ஓமன் வளைகுடாவிலிருந்து வடக்கு திசையில் லராக் தீவை நோக்கிச் சென்று, பின்னர் பாரசீக வளைகுடாவை நோக்கித் தொடர்ந்து செல்ல வேண்டும். வெளியேறும் கப்பல்கள் பாரசீக வளைகுடாவிலிருந்து, லராக் தீவின் தெற்கே கடந்து, பின்னர் ஓமன் வளைகுடாவை நோக்கித் தொடர்ந்து செல்லவேண்டும் என குறிப்பிடப்பட்டது.
உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி
இவ்வாறு ஹார்முஸ் நீரிணை தொடர்பான தெளிவற்ற நிலையால் கப்பல்கள் அந்த நீரிணையை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன்,நேற்று, 3 கப்பல்கள் மட்டுமே அந்த வழியாக சென்றதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
you may like this