பிரபல தொலைக்காட்சி தொடர் பாணியில் போதை வியாபாரம்: இந்தியாவில் அறிவியல் ஆசிரியர்கள் கைது
இந்தியாவின் ராஜஸ்தானில் போதைப்பொருள் தயாரித்த குற்றச்சாட்டில் இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சுமார் 15 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ மெஃபெட்ரோன் போதைப்பொருளை தயாரித்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் பயன்பாடு கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங் பேட்
குறித்த ஆசிரியர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலேயே இந்த போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டரை மாதங்களாக விடுமுறையில் இருந்து அவர்கள் போதைப்பொருட்களை தயாரித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு பிரபல அமெரிக்க தொலைக்காட்சித் தொடரான பிரேக்கிங் பேட்(Breaking Bad) பாணியில் அமைந்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
குறித்த தொடரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரசாயனவியல் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கல்வி பயின்ற மாணவன் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் தயாரிப்பது போன்று கதை நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
