பாடசாலைகளில் அனைத்து வகுப்புக்களையும் ஆரம்பித்தல் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களையும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி பாடசாலைகளில் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) கூறியுள்ளார்.
தினேஸ் குணவர்தன நேற்றைய தினம் கண்டியில், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தற்போது மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் பாடசாலைகளில் சுத்திகரித்தல் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் நாட்டில் கோவிட் தொற்று பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பான அறிவித்தல் அடுத்துவரும் நாட்களில் வெளியிடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam