பாடசாலைகள் நவம்பரில் திறக்கப்படுகின்றதா? கல்வி அமைச்சு தயார் செய்துள்ள திட்டம்
இலங்கையில் பாடசாலைகளை திறப்பதற்கான திட்டத்தைக் கல்வி அமைச்சு ஏற்கனவே தயார் செய்துள்ளதாக தெரியவருகிறது.
பாடசாலைகளை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் திறக்க ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு யோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நாடு முழுவதும் பாடசாலைகளைத் திறப்பது குறித்து சுகாதார வழிகாட்டுதல்களை எதிர்வரும் 13ஆம் திகதிக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசேட வைத்தியர்கள், தொழிநுட்ப மதிப்பீட்டு முகவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் உதவியுடன் வழிகாட்டுதல்களை தயாரித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இதேநேரம், 12 - 18 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், க.பொ.த சாதாரணதர முடிவுகளை வெளியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்ட நிலையில் செயன்முறை பரீட்சை இதுவரை நடத்தப்படாததால் முடிவுகள் வெளியிடுவதற்குத் தாமதமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படாமல் பரீட்சை முடிவுகளை வெளியிட இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam