ஆசிரியர் மீது பாடசாலை மாணவன் தாக்குதல்! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(24) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அச்சத்தில் ஆசிரியர்கள்
முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொடர்ச்சியாக இடம்பெறும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள், ஆசிரியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |