யாழில் ஏழு மாதங்களின் பின் பாடசாலை ஒன்றிற்கு இணைக்கப்பட்ட மின்சாரம்
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்கு உட்பட்ட ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் ஏழு
மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனின் தலையீட்டினால் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலையில் மின்சார இணைப்புக்கான பட்டியல் நிலுவைத் தொகை வலயக் கல்வி பணிமனையினால் செலுத்தப்படாத நிலையில் குறித்த பாடசாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தண்டப் பணம்
துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீளப் பெறுவதற்கு தண்டப் பணமாக சுமார் 3000 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.

தண்டப் பணத்தை வலயக் கல்வி பணிமனை செலுத்தினால் கணக்காய்வு திணைக்களத்துக்கு காரணம் கூற வேண்டி வரும் என்ற காரணத்தினால் பணத்தைச் செலுத்ததாது காலம் தாழ்த்தி வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் இ.இளங்கோவனின் துரித நடவடிக்கை காரணமாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்ட பணிபுரையின் படி பாடசாலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri