யாழ் மாவட்டத்தில் தேசியமட்ட போட்டியில் இருந்து மாணவனை மிரட்டி விலக வைத்த பாடசாலை சமூகம்

Jaffna Sri Lanka Sri Lankan Schools
By Kajinthan Dec 08, 2022 09:10 AM GMT
Report

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனை தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்க விடாமல் அதிபர், ஆசிரியர்கள் தடுத்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முறைப்பாட்டை விசாரிப்பதற்காக பாடசாலைக்கு வருகை தந்த வலிகாமம் கல்வி வலய அதிகாரி ஒருவரும், குறித்த மாணவனை சுய விருப்பத்தின் பேரில் போட்டியில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதித் தருமாறு வற்புறுத்தினார் எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நாடகம் ஒன்று கோட்டம், வலயம், மாவட்டம், மாகாண மட்டங்களில் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11.12.2022) கொழும்பில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

போட்டியில் பங்குபற்றும் மாணவர்களில் சிலர் அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். அவர்களில் சிலர் பாடத் தெரிவின் அடிப்படையில் மேற்படி பாடசாலையில் இல்லாத பாடங்களை கற்பதற்கு விரும்பியதால் வேறு பாடசாலைகளில் அனுமதி பெற்றிருக்கின்றனர் எனத் தெரியவருகின்றது.

இதேபோன்றே, மேற்படி மாணவனும் ஊடகவியல் பாடத்தைக் கற்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அந்தப் பாடத்திற்கு பாடசாலையில் ஆசிரியர் இன்மையால் வேறு பாடசாலையில் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த மாணவனும் தேசிய மட்டத்திற்கு செல்லும் நாடகக் குழுவில் இடம்பெற்றிருந்ததால் கடந்த வாரம் பாடசாலையில் இடம்பெற்ற ஒத்திகை பார்க்கும் நிகழ்விற்கு சென்றிருந்தார்.

இதன்போது, அவரை அழைத்த அதிபர் வேறு பாடசாலைக்கு செல்லவிருக்கும் மாணவன் என்பதால் நாடகத்தில் பங்குபற்ற முடியாது எனக் கூறி அவரது விடுகைப் பத்திரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினார்.

வீட்டிற்கு சென்ற மாணவன் விடயத்தை பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து பாடசாலைக்கு சென்ற தாயார் தமது கோரிக்கை இன்றி தனியே மகனிடம் விடுகைப் பத்திரத்தைக் கொடுத்தமை தொடர்பாக தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளனர்.

மேலும் நாடகத்தில் தமது மகன் இடம்பெறாமை குறித்தும் கவலையை வெளியிட்டார்.

முறைப்பாடு

இதன்போது, கொழும்பிற்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு நிதி இல்லை எனவும் தாம் போட்டிக்கு செல்லவில்லை எனவும் அதிபர் தமக்கு தெரிவித்தார் என தாயார் கூறியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் தேசியமட்ட போட்டியில் இருந்து மாணவனை மிரட்டி விலக வைத்த பாடசாலை சமூகம் | School Community National Level Competition

எனினும், பின்னர் நாடக ஒத்திகைக்காக மாணவர்களுக்கு அறிவிக்கும் வாட்சப் குழு கலைக்கப்பட்டு குறித்த மாணவன் இணைக்கப்படாமல் புதிய குழு உருவாக்கப்பட்டு நாடக ஆற்றுகைக்கான ஒத்திகை இடம்பெற்றிருக்கின்றது.

இதை அறிந்த தாம் அதிபரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அதிபர் என்ற வகையில் தமக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உண்டெனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் என தாயார் கூறியுள்ளார்.

மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக வலிகாமம் வலயக் கல்வி அலுவலகம், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் பெற்றோர் நேற்று முன்தினம் (06.12.2022) முறைப்பாடு செய்துள்ளனர்.

அனுமதிக்க விரும்பவில்லை

இதன்போது, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர், விசாரணை நடத்துவதற்காக நேற்று (06.12.2022) பிற்பகல் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட இரு பெற்றோர்களும் ஆசிரியர்கள் சிலரும் குறித்த மாணவனுக்கு எதிரான கருத்துக்களை கடுமையாக முன்வைத்த அங்கிருந்த பெற்றோர்கள்,  மாணவன் போட்டியில் கலந்துகொள்வதாக இருந்தால் தமது பிள்ளைகளை தாம் பங்குபற்ற அனுப்பமாட்டார் எனக் கூறியிருக்கின்றனர்.

மாணவன் ஒழுக்கம் அற்றவர் எனவும் அவரை இனி பாடசாலை நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதிக்க தாம் விரும்பவில்லை எனவும் ஆசிரியர்கள் கூட்டாகத் தெரிவித்தனர் என தாயார் கூறியுள்ளார்.

மாணவனுக்கு குரல் வளம் சரியாக இல்லை என அங்கிருந்த இசைத்துறை பாட ஆசிரிய ஆலோசகர் தெரிவித்தார் எனக் கூறிய தாயார், நாடகம் மாகாண மட்டம் வரை சென்று வெற்றிபெறுவதற்கு சரியாக இருந்த குரல்வளம் இப்போது எப்படி திடீரென இல்லாமல் போகும் எனக் கவலையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விலகல் கடிதம்

யாழ் மாவட்டத்தில் தேசியமட்ட போட்டியில் இருந்து மாணவனை மிரட்டி விலக வைத்த பாடசாலை சமூகம் | School Community National Level Competition

தீர்வை வழங்குவதற்காக பாடாசாலைக்கு வந்திருந்த கல்வி வலய உயரதிகாரி, மாணவனின் தாயாரை வெளியே அனுப்பிவிட்டு அறையினை பூட்டி, மாணவனை சுயவிருப்பில் நாடகத்தில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதி ஒப்பிட்டு வழங்குமாறு கோரினார் எனவும் தாயார் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இவ்வாறு முறையற்று நடந்துகொண்டால் வலிகாமம் வலயத்தின் கல்வி எப்படி உயரும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பாடசாலையின் அதிபரை தொடர்புகொண்ட வேளை அதிபர் பதில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறிவிட்டு அழைப்பினை துண்டித்தார்.

இது தொடர்பில் தகவல் பெறுவதற்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டவேளை மாணவன் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மாணவர்களை வழிப்படுத்தி வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய கல்விச் சமூகமே மாணவர்களின் திறமைகளை குழிதோண்டிப் புதைப்பது என்பது மிகுந்த மனவேதனையையும் பாடசாலைச் சமூகம் மீதான அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
நன்றி நவிலல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US