இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தொடர்பில் அதிகரிக்கும் மோசடிகள்
இஸ்ரேல்(Israel) நாட்டில் கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக நம்ப வைத்து மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக மோசடி நபர்கள் சிலர் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
வேலைவாய்ப்பு
அவ்வாறானவர்களிடம் ஏராளமான பொதுமக்கள் பெரும் தொகைப் பணத்தை செலுத்தி, அதன் பின்னர் வேலைவாய்ப்பு பெற்றுக் கொள்ள முடியாமலும், பணத்தைத் திரும்ப பெறமுடியாமலும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் போலி வட்சப் கணக்குகளை உருவாக்கி, இஸ்ரேலில் வேலை வழங்குவதாக கூறி இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றின் ஊடாக பொதுமக்களை எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam