இலங்கைக்கு சவூதி அரேபியா வழங்கிய அன்பளிப்பு!
50 தொன் எடைகொண்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு, சவூதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்த அன்பளிப்பு சவூதி அரேபிய மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (16.03.2023) கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி குறித்த பேரீச்சம்பழ தொகையை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.
ரமழான் காலம்
இலங்கையின் சார்பில் புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அதனைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
சவூதி அரேபிய அரசாங்கம் வருடாந்தம் ரமழான் காலத்தை முன்னிட்டு பெருந்தொகை பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
