அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலையை குறைத்தது சதொச
எட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகும்.
குறைக்கப்பட்டுள்ள விலை
ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌபியின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 265 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் சிவப்பு கௌபியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 940 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 254 ரூபாவாகும்.
மேலும், சிகப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 370 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் வெள்ளை 4 சீனியின் விலை ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 254 ரூபாவாகும்.
மேலும், ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 285 ரூபாவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
