சசிகலா வீட்டின் மீதான தாக்குதல் விவகாரம்: பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் குற்றச்சாட்டு
தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இதுவரையில், மேற்கொள்ளப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டணியில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழில் நேற்று(29.10.2024) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர் என்று கருதப்படும் பெண் ஒருவரால் என்னுடைய வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் நொருங்கின.
பொலிஸாரிடம் முறைபாடு
அதேவேளை, வீட்டு வாசல் தூணில் என்னுடைய கணவர் நடராஜா ரவிராஜின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் மீது மை பூசி அழிக்கப்பட்டது.

அதேவேளை,எமது மதில் சுவர்களில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
என்னுடைய கணவர் ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டுக்கொண்டிருந்தபோதே தென்னிலங்கையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று வரை அவருடைய கொலையை மேற்கொண்டவர்களுக்கோ, அதற்குக் காரணமானவர்களுக்கோ தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. நாட்டில் அநீதிகளுக்கு முடிவில்லையா?"என்று அவர் கேள்வி எழுப்பினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri