ஏழரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய சஷீந்திர
புதிய இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சீனாவில் இருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்ததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை காலை முன்னிலையாகியிருந்தார்.
அங்கு சஷீந்திர ராஜபக்ஷ ஏழரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று (5) காலை வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
உர இறக்குமதி
உர இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கையை வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் - ராகேஷ்





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
