இலங்கையை பிளவுப்படுத்த தமிழர்களால் கடும் அழுத்தம்! வீதிக்கு இறங்குமாறு மக்களுக்கு அழைப்பு
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதிக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கின்றதாக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அத்தியாவசிய பொருடக்ளின் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கிய மக்கள் தேசியத்தை பாதுகாக்கவும் போராட்டத்தில் இறங்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் 13ஆவது திருத்தம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீள் எழுச்சிக்கான முயற்சிகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பின்னணியில் வட மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 16 மணி நேரம் முன்

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri
