கொழும்பில் உள்ள பிரபல செல்வந்தர்கள் சிக்கலில்! ராஜபக்சர்களுடனான தொடர்பை அம்பலப்படுத்தும் பொன்சேகா
இந்த நாட்டை விடுவிப்பதாயின் ஊழல் வலையமைப்பில் இருந்து மீட்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்கள் மற்றும் கொழும்பில் உள்ள பிரபல செல்வந்தர்கள் சிலரே இந்த பாரிய, பாரதூரமான ஊழல் குற்றங்களின் பின்னணியில் உள்ளனர் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
களுத்துறையில் நேற்று(15) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் நிறைந்த கட்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஊழல் வலையமப்பு உள்ளது.அதுவே தற்போது நாட்டை நிர்வகிக்கின்றது.
ஊழல் வலையமைப்பின் ஸ்தாபகர்களாக மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் பிள்ளைகள், கொழும்பிலுள்ள செல்வந்தர்கள் போன்றோர் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை என நம்புகின்றேன்.
அரசாங்கத்தை விமர்சித்தால் நாட்டை வீழ்ச்சிக்கு கொண்டு வந்தவர்களே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள்.
ஊழல் நிறைந்த கட்சிகளை கட்டியெழுப்புபவர்களை தடுக்க வேண்டும். அவ்வாறு செய்து விட்டு தற்போதைய அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டலாம். இதன்மூலம் நாட்டிற்கு நியாயத்தை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
